அதிக வட்டி ஆசைகாட்டி தாயாரிடமிருந்து 14 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய மகன்..!
அதிக வட்டி பெறலாம் என தாயாருக்கு ஆசைகாட்டி 14 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் மொனராகலை - வெல்லவாய பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.
14 லட்சம் ரூபாய் வங்கியில் தாயாருடைய பெயரில் வைப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த பணத்தை எடுத்து வேறு வங்கியில் வைப்பிலிட்டால் அதிக வட்டி பெறலாம் என மகன் தாயாருக்கு ஆசை காட்டியுள்ளான்.
இதன்படி நேற்றய தினம் வங்கிக்கு சென்ற தாயும் மகனும் 14 லட்சம் ரூபாய் பணத்தையும் வங்கியிலிருந்து எடுத்துக்கொண்ட நிலையில், தாயாரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்ட மகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதுடன் தலைமறைவான மகனை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.