தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தொற்று அறிகுறிகள் தென்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்விலும் பங்குகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் தன்னுடன் நெருக்கமாகப் பழகியவர்கள்
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.