யாழ்.நீர்வேலியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 3 ரவுடிகள் கைது! 9 ரவுடிகளை தேடுகிறது பொலிஸ், ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 3 ரவுடிகள் கைது! 9 ரவுடிகளை தேடுகிறது பொலிஸ், ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது..

யாழ்.நீர்வேலி - பூதர்மடம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 3 ரவுடிகளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருக்கின்றனர். 

கடந்த வியாழக்கிழமை நீர்வேலி - பூதர்மடம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், வயோதிபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு ரவுடிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளும் நீர்வேலியை சேர்ந்தவர்கள். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரியாலை - நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஆட்டோவும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை தாக்குதல் சம்பவத்தில் 11 ரவுடிகள் பங்கெடுத்திருந்த நிலையில் மிகுதி 9 ரவுடிகளை பொலிஸார் தேடிவருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு