யாழ்.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் உயிரிழப்பு..! கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தவர்..
யாழ்.காரைநகர் பிரதேசசபை தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில்
திடீர் சுகயீனமடைந்த அவர் நேற்றுமுன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.