யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படை நடத்திய மிலேச்சைதனமான படுகொலையின் 34ம் ஆண்டு நினைவேந்தல்..
இந்திய அமைதிப்படை யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து நடத்திய மிசேச்சைதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 34ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுட்டிக்கப்பட்டது.
1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதன்
34 ம் ஆண்டு நினைவு தினம் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக
உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.