யாழ்.பொன்னாலையில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்ட படையினர்..! இருவர் கைது, வாகனம் கைப்பற்றப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை சோதனையிட்ட படையினர்..! இருவர் கைது, வாகனம் கைப்பற்றப்பட்டது..

யாழ்.பொன்னாலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெருமளவு சாராய போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் 

குறித்த வாகனத்தினை சோதனையிட்டனர். இதன்போது அதிலிருந்த 30 பெட்டிகளில் 750 சாராய போத்தல்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இதனையடுத்து சாராய போத்தல்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு