யாழ்.காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் கடற்படை படகு மோதியதில் இந்திய ரோலர் மூழ்கியது! இரு மீனவர்கள் மீட்பு, ஒருவரை காணவில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் கடற்படை படகு மோதியதில் இந்திய ரோலர் மூழ்கியது! இரு மீனவர்கள் மீட்பு, ஒருவரை காணவில்லை..

யாழ்.காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்களின் ரோலர் படவை கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போதே கடற்படையின் படகு இந்திய மீனவர்களின் படகு மீது மோதியிருக்கின்றது. 

இந்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகு காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 

அப்பகுதி ஊடாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் படகை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கடற்படை படகு மோதி ரோலர் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் இருந்து 3 மீனவர்கள் கடலில் மூழ்கியுள்ளனர். 

எனினும் சுகந்திரன், சேவியர் ஆகிய இரு மீனவர்கள் இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளபோதும் ராஜ்கிரன் என்ப படகோட்டி கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளார். மீட்கப்பட்ட இரு மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு