யாழ்.கொக்குவிலில் சிறுமி மீது வன்புணர்வு..! ஒளிப்படப்பிடிப்பாளர் கைது, சிறுமியின் புகைப்படத்தை வைத்திருப்போரை தேடுகிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவிலில் சிறுமி மீது வன்புணர்வு..! ஒளிப்படப்பிடிப்பாளர் கைது, சிறுமியின் புகைப்படத்தை வைத்திருப்போரை தேடுகிறது பொலிஸ்..

13 வயதான சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் யாழ்.நகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார். 

இந்நிலையில் சிறுமியின் புகைப்படங்கள் சிலவற்றை கைது செய்யப்பட்ட உரிமையாளரின் நண்பர்கள் வைத்திருப்பதாகவும், அதனை அவர்கள் வெளியிடப்போவதாகும் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட நபர்களை தேடி வருகின்றனர். 

யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்.மாநகரில் ஒளிப்படப்பிடிப்பு (ஸ்ருடியோ) நடத்துபவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக உறவினரான சந்தேக நபர் பல தடவைகள் தன்னை வன்புணர்ந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார். 

பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ வல்லுநரின் பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னேடுக்கப்படவேண்டும் என்றும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு