தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்! யாழ்.வட்டுக்கோட்டையில்..

ஆசிரியர் - Editor I
தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்! யாழ்.வட்டுக்கோட்டையில்..

தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்று அதிகாலை 3மணியளவில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். 

தாய்ப்பாலை குடித்த குழந்தை சில நிமிடங்களில் மயங்கிய நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டபோதும் அதிகாலை 5.30 மணியளவில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு