தனியார் வகுப்புக்களை நவம்பர் 1ம் திகதி திறக்க முஸ்தீபு..! அலரி மாளிகை கலந்துரையாடலில் பேசப்பட்டது என்ன?
நாட்டில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் வகுப்புக்கள் அல்லது மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றய தினம் நிதியமைச்சருடன் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் தினத்தில் சுகாதார அமைச்சருடனும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எனினும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ்
மேலதிக வகுப்புக்களை நடாத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.