யாழ்.ஏழாலையில் பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட இரு ரவுடிகளும் மீள கைதாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட இரு ரவுடிகளும் மீள கைதாம்..!

யாழ்.ஏழாலையில் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தபோதும் பொலிஸார் வேண்டுமென்றே தப்பிக்க விட்டதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தில் தப்பி சென்ற இரு ரவுடிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மற்றய நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் இருவரும் பிரதி வெள்ளி கிழமைகளில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் 

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமக்கு கூறியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் கூறியிருக்கின்றார். 

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய ரவுடிகளை பொலிஸார் வேண்டுமென்றே தப்பிக்க விட்டனர் என தாக்குதலுக்கு இலக்கானவர்கள் முறைப்பாடு பதிவு செய்திருந்த நிலையில் கடந்த 8ம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்.பிராந்திய அலுவலகத்தில்

முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை அப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு