யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சி! கொரோசா சிகிச்சை விடுதி ஒன்று மூடப்படுகிறது..
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்திருப்பதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை விடுதிகளில் ஒன்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம். என பணிப்பாளர் கூறியுள்ளார்.