யாழ்.செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸார்..! சமய நிந்தனை என மக்கள் விசனம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.செல்வச்சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோவில்களுக்குள் சப்பாத்துடன் நுழைந்த பொலிஸார்..! சமய நிந்தனை என மக்கள் விசனம்..

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரிகள் சமய நிந்தனை செய்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார். 

யாழ்.மாவட்டத்திற்கு இன்று நண்பகல் வருகை தந்துள்ள பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் 

காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சப்பாத்துக்களை கழற்றாது ஆலயங்களுக்குள் சென்றுள்ளார். வல்லிபுராழ்வார் ஆலயத்தில் இவருடன் STF, பொலிஸ்மா அதிபரின் பாதுகாவலர்கள் கோவிலுக்குள் சப்பாத்துக்கால்களுடன் சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு