யாழ்.சுழிபுரம் - காட்டுப்புலத்தில் தாய், மகன் மீது கத்தி வெட்டு..! ஒருவர் கைது..
யாழ்.சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் குடும்ப பெண் மீதும் அவருடைய மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அயல் வீட்டாருடனான தகராறில் 45 வயதான குடும்ப பெண் மீதும் அவருடைய 16 வயதான மகன் மீதும் கத்தியால் வெட்டியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அயல் வீட்டாரான 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.