யாழ்.சுழிபுரம் பறாளை முருகன் கோவில் காவலாளியை தாக்கிட்டு உண்டியலை திருடிய கும்பல்..!
யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் - பறாளை முருகன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கின்றது.
நேற்று முன்தினம் இரவு முகமூடிகள்,கையுறைகள் அணிந்த ஆறு பேர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த காவலாளியைத் தாக்கிவிட்டு
பணத்தினை திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.