யாழ்.ஏழாலையில் வீடொன்றில் இயங்கிய போதை மாத்திரை விற்பனை நிலையம் முற்றுகை! வியாபாரியும் கைது, பொலிஸார் அதிரடி..
யாழ்.ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சுமார் 6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை 9 ஆயிரத்து 60 மாத்திரைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டதாகவும்,
கூறியிருக்கும் பொலிஸார் ஏழாலையைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவரையே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர்
இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.