பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எங்கள் பிரதேசத்திற்கு நுழையும் அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவோம்! பருத்தித்துறை - முனை மீனவர்கள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எங்கள் பிரதேசத்திற்கு நுழையும் அரசியல்வாதிகளை அடித்து விரட்டுவோம்! பருத்தித்துறை - முனை மீனவர்கள் எச்சரிக்கை..

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தாமல் எந்தவொரு அரசியல் வாதியும் பருத்தித்துறை - முனை எல்லைக்குள் நுழைய கூடாது என பிரதேச மீனவர்கள் எச்சரித்துள்ளனர். 

தமது கோரிக்கையை நிறைவு செய்யாது மீறி தமது எல்லைக்குள் நுழையும் அரசியல்வாதியும் அடித்து விரட்டப்படுவார்கள் என்று மக்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர் சங்க மண்டப முகப்பில்

இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு