இந்திய மீனவர்களால் வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்திய துணை துாதருடன் பேச்சு!

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்களால் வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்திய துணை துாதருடன் பேச்சு!

இந்திய இழுவை படகுகளால் வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று மாலை இந்திய துணை துாதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பு தொடர்பாக சந்திப்பின் நிறைவில் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைகள், மாகாணசபைத் தேர்தல் விவகாரங்கள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசினோம் என்றார். 

சந்திப்பில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.சுகிர்தனும் கலந்து கொண்டிருந்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு