யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் குறைந்தது! மாவட்டத்தில் 3 பேருக்கும், மாகாணத்தில் 14 பேருக்கும் தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் குறைந்தது! மாவட்டத்தில் 3 பேருக்கும், மாகாணத்தில் 14 பேருக்கும் தொற்று..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலை 116 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன்படி வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 05 பேர்,யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியாசலையில் 03 பேர், முல்லைத்தீவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு