பொறுப்பில்லாமல் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர்! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கப் வாகனம், 3 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
பொறுப்பில்லாமல் வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர்! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கப் வாகனம், 3 பேர் காயம்..

பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் நீர் குழாய் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் வாகனத்தின் முன்பாக வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் 

ஒருவர் கீழே விழுந்த தலைக்கவசத்தை எடுப்பதற்காக நிறுத்திய நிலையில் கப் வாகனத்தை சாரதி நிறுத்த முயன்றபோதும் கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் 

வீதியின் ஓரத்திலிருந்த நீர் குழாய் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் கப் வாகனத்தில் பயணித்த 3 பேர் காயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு