காணாமல் போயிருந்த சிறுவன் குடிநீர் விநியோக குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழியில் சடலமாக மீட்பு..! யாழ்.சங்கானையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் போயிருந்த சிறுவன் குடிநீர் விநியோக குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழியில் சடலமாக மீட்பு..! யாழ்.சங்கானையில் சம்பவம்..

யாழ்.சங்கானை பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த குறித்த சிறுவன் நேற்றய தினம் அயல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென காணாமல் போயிருந்தார்.

இதையடுத்து சிறுவனை தேடிய பெற்றோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றய தினம் இரவே குடிநீர் விநியோக குழாய் படத்துவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த தண்ணீரில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் பார்த்திபன் ஸ்டீபன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு