யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸாரினால் வீடு முற்றுகை! இரு வாள்கள் மீட்பு, ஒருவர் கைது..
யாழ்.கோண்டாவில் பகுதியில் இரு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ரவுடி வீட்டில் வாள்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து
பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டபோது வீட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரு வாள்கள் மீட்கப்பட்டிருப்பதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 18 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.