மோட்டார் சைக்கிளில் நடமாடும் கஞ்சா வியாபாரம்! யாழ்.விடத்தல் பளையை சேர்ந்தவர் கைது..

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் நடமாடும் கஞ்சா வியாபாரம்! யாழ்.விடத்தல் பளையை சேர்ந்தவர் கைது..

யாழ்.விடத்தல்பளை பகுதியில் கஞ்சாவுடன் நடமாடும் கஞ்சா வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

குறித்த கைது நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

மோட்டார் சைக்கிளில் நடமாடும் கஞ்சா வியாபாரம் நடத்திவருஅவம் நபர் தொடர்பான இரகசிய தகவல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நிலையில் 

சந்தேகநபரை கண்காணித்துவந்த நிலையில் விடத்தல்பளை பகுதியில் பொலிஸாருடன் இணைந்து கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து கஞ்சா பொதிகளும் மீட்கப்பட்டதுடன் குறித்த நபர் கெற்பேலிப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு