யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த 12 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று!
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக தங்கியிருந்த 12 வயது சிறுமி உட்பட இருவர் உட்பட 6 பேருக்கும், தெல்லிப்பழையில் ஒருவருக்கும்,
கிளிநொச்சியில் ஒருவருக்கும், வவுனியாவில் ஒருவருக்கும், மன்னார் கடற்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.