யாழ்.கோப்பாயில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை! நகை விற்க சென்ற கொள்ளையன் யாழ்.நகரில் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை! நகை விற்க சென்ற கொள்ளையன் யாழ்.நகரில் கைது..

யாழ்.கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பட்டப் பகலில் புகுந்து 10 பவுண் நகைளை திருடியவரை இன்று மாலை யாழ்.நகரில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர். 

கோப்பாய் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையன் வீட்டிலிருந்தவர் குளியலறையில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்தான். 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான 

மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இன்று மாலை திருட்டு நகைகளை விற்பனை செய்யும் நோக்குடன் யாழ்.நகரில் நடமாடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் சனிக்கிழமை இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடையவை என முறைப்பாட்டின் அடிப்படையில் கண்டறியப்பட்டன. சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு