யாழ்.கைதடி அம்மாச்சி உணவகம் முன்பாக விபத்து! இளைஞன் படுகாயம், பொறுப்பற்ற சிலரின் நடவடிக்கையே விபத்திற்கு காரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி அம்மாச்சி உணவகம் முன்பாக விபத்து! இளைஞன் படுகாயம், பொறுப்பற்ற சிலரின் நடவடிக்கையே விபத்திற்கு காரணம்..

யாழ்.கைதடி அம்மாச்சி உணவகத்தின் முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நீர் குழாய்களை புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழியின் மண் வீதியோரமாக கொட்டப்பட்டு இருந்த நிலையில் அதனுடன் மோதுண்டே விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு