வவுனியாவில் பொலிஸ் காவலரணை அடித்து நொருக்கிய மர்ம நபர்கள்!
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகில் இருந்த பொலிஸ் காவல் அரண் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களே இதனைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.