கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்!
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்று வீடு திரும்பியுள்ளார்.
இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதி, கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றைய தினம் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்.