யாழில் கஞ்சா விற்பனையில் பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம், தமிழ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் உள்ளடக்கமாம்...

ஆசிரியர் - Editor I
யாழில் கஞ்சா விற்பனையில் பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம், தமிழ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் உள்ளடக்கமாம்...

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கஞ்சா விற்பனை செய்து சிக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.மாவட்டத்திற்கு கடற்பகுதி ஊடக கொண்டுவரப்படும் கஞ்சா பிடிபடும் நிலையில் அவ்வாறு பிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகளில் திருடிய கஞ்சாவை  விற்பனை செய்ததாக அறிய முடிகிறது.

4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்கள் பொலிஸ் உயர் மட்டங்களுக்கு காண்பிக்கப்பட்டதாக அறியக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உள்ளக விசாரணைகள் இடம்பெற்றதாகவும் குறித்த 4 பொலிஸாரில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு