வாயில் வாளுடன் ரிக்ரொக் வீடியோ..! உரும்பிராய் இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது..

ஆசிரியர் - Editor I
வாயில் வாளுடன் ரிக்ரொக் வீடியோ..! உரும்பிராய் இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது..

வாயில் வாளை வைத்துக் கொண்டு ரிக்ரொக் காணொளி வெளியிட்ட 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் 

யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு