பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனை..! யாழ்.சாவகச்சோியில் 7 பேர் கைது, பெருமளவு மதுபானம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனை..! யாழ்.சாவகச்சோியில் 7 பேர் கைது, பெருமளவு மதுபானம் மீட்பு..

நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு தயாரான குற்றச்சாட்டில் யாழ்.சாவகச்சோியில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

N.சோதிதாதன் உதவி மதுவரி ஆணையாளர். மதுவரி அத்தயட்சகர் T.தங்கராஜா அறிவுறுத்தலில் பொறுப்பதிகாரி அசோகரத்தினம் தலைமையில் மதுவரி பரிசோதகர் வே.றசிகரன் தலைமையிலான குழுவினர்.

கொடிகாமம், சாவகச்சேரி பகுதிகளில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 750 மி.லீ 30 போத்தல்கள்,180 மி.லீ 25 போத்தல்கள், 500 ml பியர் 100 ரின்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது ஏழு சந்தேகநபர்களையும் மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு