யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான பெண்..
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.
கொழும்பகம் வீதி யாழ்ப்பாணம் என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.