யாழ்.நீராவியடியில் உள்ள மண்டபம் ஒன்றில் கொள்ளையடித்த இருவர் கைது..! பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீராவியடியில் உள்ள மண்டபம் ஒன்றில் கொள்ளையடித்த இருவர் கைது..! பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது..

யாழ்.நீராவியடியில் உள்ள மண்டபம் ஒன்றில் திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன், திருடனை யாழ்.பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். 

கடந்த புதன் கிழமை குறித்த மண்டபத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், 

பொம்மைவெளியை சேர்ந்த இருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 

பொம்மைவெளியில் உள்ள இரும்பு கடை ஒன்றில் கொள்ளையடித்த பொருட்களை கொடுத்தமை தொியவந்துள்ள நிலையில், 

பித்தளை விளக்கு 11, பொிய குத்துவிளக்கு 1, அம்பிலிபயர் 1, சில்வர் பொருட்கள், கதிரைகள் 25, மின்பிறப்பாக்கி 1 போன்ற பொருட்கள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு