பருத்தித்துறை - கரணவாயில் தாய், மகன் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை - கரணவாயில் தாய், மகன் கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது..!

யாழ். பருத்தித்துறை - கரணவாய் பகுதியில் தாயையும் மகனையும் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரணவாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த மாதம் தலைமறைவாகி இருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான யுவதியின் தாயையும் அவரின் சகோதரரையும் சிலர் கடத்தி வைத்திருந்து பின்னர் விடுவித்திருந்தனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக இளைஞனின் தந்தை ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் 

நெல்லியடி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சட்டத்தரணி ஒருவர் மூலமாக நெல்லியடி பொலிசில் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு