யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதி ஊடாக பயணிக்க தடை விதிப்பது ஏன்..? தமக்கு எதுவும் தொியாது என கூறும் அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - பருத்தித்துறை வீதி ஊடாக பயணிக்க தடை விதிப்பது ஏன்..? தமக்கு எதுவும் தொியாது என கூறும் அதிகாரிகள்..

யாழ்.கொடிகாமம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இரு கிராமங்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த கிராமங்கள் ஊடாக செல்லும் கொடிகாமம் - பருத்தித்துறை வீதி ஊடாக பயணிக்க தடை விதிக்கப்படுகின்றது. 

கிராமங்கள் முடக்கப்படும்போது உள்ளக வீதிகள் ஊடாக பயணம் செல்வது தடைசெய்யப்படுவது வழக்கம். ஆனால் பிரதான வீதியை ஊடான பயணத்தை தடை செய்வது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத விடயம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இது குறித்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதான வீதி ஊடாக பயணிப்பதை தடைசெய்யுமாறு தங்களிடமிருந்து எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர். 

இதேவேளை முடக்கல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினை தொடர்பு கொண்டு கேட்டபோது தாம் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை அடையாளப்படுத்தியிருக்கிறோம். 

அதற்கும் மேலதிகமாக பிரதான வீதியை முடக்கும் அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை. என கூறியிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த வீதி ஊடாக பயணிக்கும் பொதுமக்கள் திருப்பி அனுப்படுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு