யாழ்.அரியாலை - நாவலடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்..!
யாழ்.அரியாலை - நாவலடி பகுதியில் குளத்தில் குளிக்க சென்றிருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.