யாழ்.பருத்துறை தும்பளையில் வாள்களுடன் வந்த வன்முறை கும்பல் மாணவியுடன் தர்க்கம்..! பொலிஸ் என கத்தியதால் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை தும்பளையில் வாள்களுடன் வந்த வன்முறை கும்பல் மாணவியுடன் தர்க்கம்..! பொலிஸ் என கத்தியதால் வாள்களை வீசிவிட்டு தப்பி ஓட்டம்..

யாழ்.பருத்துறை - தும்பளை பகுதியில் வாள்கள், கம்பிகள், தடிகளுடன் வந்த வன்முறைக்கும்பல் மாணவி ஒருவருடன் தகராறு புரிந்த நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று மாலை 6.45 மணயளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதிக்கு வாள்கள், கம்பிகள், தடிகளுடன் வந்த வன்முறை கும்பல், 

மாணவி ஒருவருடன் தகராறு புரிந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்தில் கூடியதை தொடர்ந்து வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. 

இதனையடுத்து சிறிது நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் அந்த பகுதிக்கு வந்திருந்த வன்முறை கும்பல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை வெட்டுவதற்கு துரத்தியுள்ளது. 

இதன்போது தப்பி ஓடிய இளைஞர்கள் பொலிஸ் என கத்திய நிலையில் இரு வாள்களை போட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கின்றது. எனினும் உண்மையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வன்முறை கும்பல் வீசிவிட்டு சென்ற வாள்களை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

இதனால் பருத்துறை - தும்பளை பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு