கடலில் தவறி விழுந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்..! யாழ்.ஊர்காவற்றுறை - கண்ணகையம்மன் இறங்குதுறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கடலில் தவறி விழுந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்..! யாழ்.ஊர்காவற்றுறை - கண்ணகையம்மன் இறங்குதுறையில் சம்பவம்..

 யாழ்.அனலைதீவுக்கு செல்லும்போது ஒரு படகிலிருந்து மற்றொரு படகில் ஏறிய நிலையில் காற்றினால் படகு விலகிய நிலையில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கடலில் தவறி விழுந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு துறையில் இடம்பெறறது. மாரடைப்பில் காலமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அனலைதீவு வட்டார பிரதேச சபை உறுப்பினரின் 

மரணச்சடங்கு நேற்று அனலைதீவில் இடம்பெற்றது. இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் நேற்று காலை அனலைதீவுக்கு சென்றிருந்தனர். 

மரணச்சடங்கு என்பதால் பயணிப்பதற்கு தயாரான படகில் அளவுக்கு அதிகமான மக்கள் ஏறியதால் படகோட்டிகள் இன்னுமொரு படகையும் ஒழுங்கு படுத்தி 

அதில் ஒருதொகுதி மக்களை கடலில் வைத்து ஏற்றினார்கள். இதன் போது படகில் இருந்து படகிற்கு பயணிகள் இடம்மாறும் போது படகு காற்றினால் விலத்தி சென்றதால் 

குறித்த நேரத்தில் படகில் இருந்து மற்றைய படகுக்கு மாறிய கஜதீபன் தவறி கடலில் வீழ்ந்துள்ளார். எனினும் படகில் இருந்தவர்கள் உடனடியாக கயிற்றினை வீசி மீட்க உதவியுள்ளனர். 

குறித்த விபத்து சம்பவத்தினால் கஜதீபன் சிறிய காயங்களுக்கு உள்ளாகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

குறித்த சம்பவத்தினால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியதோடு படகோட்டிகளின் கவனயீனம் தொடர்பிலும் விசனமடைந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு