யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா தொற்று..! அச்சுவேலி வைத்தியசாலை வைத்தியர், தாதி உட்பட 6 பேர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு கொரோனா தொற்று..! அச்சுவேலி வைத்தியசாலை வைத்தியர், தாதி உட்பட 6 பேர் தனிமைப்படுத்தலில்..

யாழ்.அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வைத்தியர், தாதியர், மற்றும் பணியாளர்கள் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பியிருந்த நிலையில் தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், 

அவருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதயைடுத்து சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய வைத்தயர், தாதி மற்றும் பணியாளர் உட்பட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு