மண்ணெண்ணெய் கலப்படம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -அமைச்சர் அர்ஜின-

ஆசிரியர் - Editor I
மண்ணெண்ணெய் கலப்படம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -அமைச்சர் அர்ஜின-

2014ஆம் ஆண்டு இலங்கை மண்ணெண்ணெய் நுகர்வு கிலோ லீட்டர் 1,38,505. 2017ஆம் ஆண்டு கிலோ லீட்டர் 1,98,090 ஆக உயர்வு. மண்ணெண்ணெய் நுகர்வு செயற்கையாக அதிகரித்துள்ளது. 

• இலங்கை மண்ணெண்ணெய் மானியமாக பொதுமக்களுக்கு ரூபா 44ஆக விற்கப்படுகின்றது. ஒரு லீட்டரால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 48 நட்டம் ஏற்படுகின்றது. 2017ஆம் ஆண்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட மொத்த நட்டம் ரூபா 5.4 பில்லியன் ஆகும். இதற்கு காரணம் மண்ணெண்ணெய் கலப்படமேயாகும்.

• மானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெயை சிலர் கலப்படம் செய்ய இடமளிக்கமாட்டோம். ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் உரிமைப்பத்திரம் ரத்துசெய்யப்படும். மேலும் எதிர்காலத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்தார்.

இன்று 22-03-2018 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்த செய்தியாளர் சந்திப்புக்கு காரணம் நாங்கள் மண்ணெண்ணெய் கலப்படம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்டடுள்ளது. 

இது தொடர்பாக முதலில் ஊடகங்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன். காரணம் மண்ணெண்ணெய் கலப்படம் தொடர்பாக ஊடகங்கள் பெரும் பங்களிப்பை எமக்கு தந்தiமாகும்.  

இதுதொடர்பாக நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தேன். இதற்கு ஜனாதிபதி சில ஆலோசனைகளை எனக்கு வழங்கிள்ளார். குறிப்பாக ஜனாதிபதி சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு ஜனாதிபதியும் நானும் கையொப்பமிட்டுள்ளோம்.

மேலும் இடம்பெறும் மண்ணெண்ணை கலப்படத்தை நிறுத்தவே இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சதவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் மண்ணெண்ணெயை பயன்படுத்துவது சாதாரன ஏழை மக்கள், மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணை விளக்குகளே பயன்படுத்துகின்றன.

மேலும் மீன்பிடி மக்கள் பயன்படுத்தினர் ஆனால் தற்போது அதுவும் குறைவடைந்துள்ளது. காரணம் டீசல் படகுகளின் வருகையினால்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெயை ஒரு லீட்டருக்கு ரூபா 48 நட்டத்தில்தான் விற்கப்படுகின்றது.

நாடு மற்றும் அரசு என்ற ரீதியிலேயே நட்டத்தின் மத்தியில் நாங்கள் விநியோகிக்கின்றோம்.

இதில் இருக்கும் பாதகமாக  சில முதலாளிகள், வியாபாரிகளின் செயற்பாட்டால் மண்ணெண்னை நுகர்வு அதிகரித்து டீசல் பாவனை குறைந்துள்ளது. 

நாங்கள் நடத்திய ஆய்வில் சில எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோலில் மண்ணெண்ணை கலப்படம் செய்யப்படுகின்றது. வழிநடுவில் பவுசர்களில் மண்ணெண்ணை கலப்படம் இடம்பெருகின்றது. 

எங்களது சிறப்பு குழவினால் மண்ணெண்ணெய் கலப்படத்திற்கு காரணமான நிறைய பேரை கண்டுபித்துள்ளளோம். ஆனால் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாகவே சில சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை ஆகவே தான் நாங்கள் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளோம்.

நாங்கள் எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு கிடைக்கும் மானியத்தை சில வியாபரிகளின் கையில் சிக்காமல் இருக்க. இதற்கமைவாகவே இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டடால் அந்த எரிபொருள் நிலையத்தின் உரிமம் பத்திரத்தை ரத்துசெய்யவும் அந்த எரிபொருள் நிலையத்ததை சட்டத்திற்கமைய எமது நிறுவனத்தின் கீழ் கொண்டுவரவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

லொரி மற்றும் பஸ்களுக்கு குறிப்பாக சிலர் மண்ணெண்ணை கலந்த டீசலை அல்லது வெறும் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர். இதனால் பெரிய அளவில் சுற்றாடல் மாசு இடம்பெறுகின்றது. இதனால் ஏழைகளுக்கு கிடைக்கும் இலாபத்தை சில முதலாளி மார்களுக்கு கிடைக்கின்றது. 

ஆகவேதான், எரிபொருள் நிலையத்தில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம். 

நான் நினைக்கின்றேன் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இதுவாகும். 

நான் ஜனாதிபதிக்கு  நன்றி கூறவேண்டும் காரணம் அவர் அதற்கு முழு ஓத்துழைப்பை வழங்கியுள்ளார்.

ஊடகங்களுக்கும் தெரிவிப்பதானது நாங்கள் மண்ணெண்ணெய் கலப்படத்தை பிடிக்கும் போது யாருடைய எரிபொருள் நிலையமாக இருந்தாலும்; சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துவோம்.' என்று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

'2014ஆம் ஆண்டு மண்ணெண்ணெய் விநியோம் கிலோ லீற்றர் 1,38,505 ஆகும். 

2017ஆம் ஆண்டில் கிலோ லீற்றர் 1,98,090ஆக மண்ணெண்ணெய் நுகர்வு உயர்ந்துள்ளது. 

தற்போது டீசல் வாகனங்கள் மற்றும் படகுகள் அதிகரிக்கும் அதேசமயம் மண்ணெண்ணை நுகர்வும் அதிகரித்துள்ளது. 

காரணம் மண்ணெண்ணை கலப்படம் நிகழ்ந்துள்ளது. 

ஜனவரியிலிருந்து பெப்ரவரி 28 வரை மண்ணெண்ணை கிலோ லீட்டர் 44,137 நாற்பத்தி நாலாயிரத்தி நூற்றி முப்பத்தேலாக விற்கப்பட்டுள்ளது.

பஸ்வண்டிகள் டீசலில் பதிவுசெய்யப்பட்ட பிறகு அதற்கு வேறு எண்ணெய் பாவிக்கமுடியாது மற்றும் அதுதான் சட்டம். 

எரிபொருள் நிலையங்களில் பஸ் மற்றும் லொரிகளுக்கு மண்ணெண்ணை விநியோகிக்கத் தடை செய்ய நாம் எதிர்காலத்தில் முடிவெடுக்வுள்ளோம்.

மண்ணெண்ணெய் கலப்படத்தால் அரசுக்கு நட்டம் ஆனால் சில வியாபாரிகள் பெரும் இலாபம் மற்றும் இதனால் சுற்றாடல் மாசடைகின்றது. மேலும் பொதுமக்களின் வாகனங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு தடுப்பதற்காகவே இந்த அமைச்சரவைப் பத்திரம்.

குறிப்பாக கடந்த காலத்தில் தரமற்ற எண்ணெய் கப்பலை கொண்டுவர இருந்தனர். அதனை தடுத்தி நிறுத்தினோம். நாம் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தோம்.

நான் அமைச்சராக இருந்தாலும் பிரதியமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து முக்கிய தீர்மானம் எடுத்தோம். 

இந்த நாட்டில் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வழி அமைக்கமாட்டேன்.

ஆகவே எதிர்காலத்தில் கடுமையான தீமானத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையுள்ளது. ஆகவே நாங்கள் மண்ணெண்ணெய் கலப்படத்i நிறுத்த எல்லா முயற்சிகளை மேற்கொள்கின்றோம். காரணம் மண்ணெண்ணெய் பாவனை குறையவேண்டிய காலத்தில்தான் அதன் நூகர்வு அதிகரித்துள்ளது. என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க  தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு