இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர் கோண்டாவிலில் உள்ள இ.போ.ச தலமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டாரா?
யாழ்.காரைநகர் இ.போ.ச சாலையில் பணியாற்றும் 8 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களில் ஒருவர் கோண்டாவில் பகுதியில் உள்ள இ.போ.ச தலமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
நெடுந்துார பயணிகளுக்கான பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பாக இன்று கலந்துரையாடல் நடைபெற்றிருக்கின்றது. இந்த கலந்துரையாடலில் இன்று தொற்றுக்குள்ளான இ.போ.ச ஊழியர் ஒருவர் கலந்து கொண்டிருந்ததாக இ.போ.ச வட்டாரங்களே கூறுகின்றன.