எனக்கு இதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இராணுவம் என்னை அடிக்கவில்லை..! இராணுவம் அடித்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
எனக்கு இதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் இராணுவம் என்னை அடிக்கவில்லை..! இராணுவம் அடித்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் வாக்குமூலம்..

இராணுவத்தினரின் தன்னை தாக்கியதாக தொிவித்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதான இளைஞன் தன்னை இராணுவம் அடிக்கவில்லை. எனவும் தான் தவறி விழுந்துவிட்டேன். எனவும் தனக்கு வேறு எதுவும் நினைவில்லை. எனவும் கூறியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக தொியவருகின்றது. சுன்னாகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தன் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறி உடுவில் பகுதியை சேர்ந்த

சிவலிங்கம் கமில்தாஸ் என்ற இளைஞன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் , சுன்னாக பொலிஸார் வைத்திய சாலைக்கு சென்று இளைஞரிடம் 

விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பெற்ற போது, தான் தவறி விழுந்தே காயங்களுக்கு உள்ளானேன் என வாக்கு மூலம் அளித்ததுடன் , தனக்கு வேறு எதுவும் ஞாபகம் இல்லை எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு