யாழ்.திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்..! பலர் பீ.சி.ஆர் பரிசோதனை இன்றி வந்துள்ளனராம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.திருநெல்வேலி சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நல்லுார் பிரதேசசபையினரால் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். 

நல்லுார் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையை சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதி பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்றுவருகின்றது. 

இந்நிலையில் தென்னிலைங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்துவருவதாக நல்லார் பிரதேசசபை தவிசாளர் மயூரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, 

தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 நாட்களுக்குள் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து அதன் அறிக்கை வைத்திருக்காத அனைவரும் 

வெளியேற்றப்பட்டதுடன், அவர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் பிரதேசசபையினால் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு