வடமராட்சியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

ஆசிரியர் - Admin
வடமராட்சியில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார். மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது. 

இந்நிலையில் அவரது சடலம் இன்று காலையில் வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உடலம் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு