ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரியிடம் விக்னேஸ்வரன் வெளியிட்ட கவலை!
வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று ருவிட்டனர் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார்.