ஜனாதிபதி மைத்திரி- மோடி சந்திப்பு!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி மைத்திரி- மோடி சந்திப்பு!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, இன்று மதியம்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, இந்திய அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு