யாழ்.வல்லிபுர கோவிலை அண்டிய பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞன்..! பொதுமக்கள் மீட்டனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை வல்லிபுர குறிச்சி பதியில் மணல் கடத்தல்காரர்களுடன் முரண்பட்ட நிலையில் காணாமல்போயிருந்த இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வல்லிபுர கோவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளான்.

கிருஷ்ணபிள்ளை பிரதீபன் (வயது-24) என்ற குறித்த இளைஞன் நேற்று முன்தினம் காணாமல்போயிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டிருக்கின்றார்.

வல்லிபுரக் கோவில் வீதிப் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை அவதானித்த நபர் ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அவரை பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்திருப்பதாக தெரியவருகிறது.

மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றே குறித்த இளைஞரை கடத்தியதாக குடும்பத்தாரால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு