தோட்ட கிணற்றடியில் கார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி..! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தோட்ட கிணற்றடியில் கார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி..! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

உரும்பிராய் கிழக்கு பகுதியில் தனது தோட்ட கிணற்றுக்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற வயோதிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூத்தண்ணை என அழைக்கப்படும் 60 வயதான முதியவர் ஒருவர் ஒருவரே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

கிணற்றடியில் தீபம் ஏற்றுவதற்காக சென்றிருந்தவரை நீண்ட நேரமாக காணாத நிலையில் அவரை தேடி சென்றபோதே அவர் கிணற்றில் விழுந்து இறந்தமை தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு