யாழ்.காங்கேசன்துறை கடலில் குளிக்க சென்றிருந்த இருவர் மாயம்..! தேடுதல் நடவடிக்கையில் கடற்படை..
யாழ்.காங்கேசன்துறை - தல்செவன இராணுவ சுற்றலா விடுதிக்கு அருகில் கடலில் குளிக்க சென்றிருந்த இருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில்இடம்பற்றுள்ளது. தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு
கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக
காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.