யாழ்.வேலணையில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி..!
யாழ்.வேலணை பகுதியில் வீதி திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கொவிட் – 19 சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
வேலணை புளியங்கூடல் வீதித் திருத்தப்பணிக்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு எழுமாறாக நடத்த பரிசோதனையில்
இவ்வாறு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதையடுத்து புளியங்கூடல் பகுதியில் 2 வர்த்தக நிலையங்கள் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில்
இன்று காலை மூடப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 9 மணிவரை 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.